| கோவில் திருப்பணிகள் |
 |
| ஸ்ரீ ஸ்வர்ண கர்ஷன பைரவர் ஆலயம் இராட்டைசுற்றி பாளையம், அவல்பூந்துறை கிராமம், ஈரோடு மாவட்டம், தமிழ்நாட்டில் அமைந்துள்ளது. இது ஈரோடு - பழனி போகும் தேசிய நெடுஞ்சாலையில் ஈரோடு இரயில் நிலையத்திலிருந்து 10 கி.மேட்டரில் அவல் பூந்துறை என்ற கிராமத்தில் அமைந்துள்ளது. 1 ஏக்கர் பரப்பளவு கொண்ட இவ்விடத்தில் ஈரோடு - பழனி செல்லும் தார்சாலையின் இடதுபுறம் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.அருகில் ஸ்ரீ பைரவா அறகட்டளை சார்பில் அமைக்கப்படவுள்ள மருத்துவமனை , அனாதைகள் காப்பகம் ,முதியோர் இல்லம் ,ஊனமுற்றோர் காப்பகம் அமைந்துள்ளது. |
| View More.. |
|
| HIV குழந்தைகள் காப்பகம் |
 |
| ஸ்ரீ விஜய் சுவாமிஜி பைரவ அறக்கட்டளையின் நிறுவனர் ஆவார். அவர் தொடக்கம் முதல் ஏழை எளியவர்,அநாதை குழந்தைகள் மற்றும் HIVயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவி செய்து கொண்டு வருகிறார்.HIV யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை இவர் தத்தெடுத்து அவர்களுக்கு கல்வி, மருத்துவம், வீடு, உணவு, பொழுதுபோக்கு,அன்றாட தேவைகள் என்று அனைத்து அத்தியாவசிய தேவைகளையும் பூர்த்தி செய்து எல்லா வகையிலும் ஒரு தாயைப் போல இவர் கவணித்து வருகிறார். இவரின் இந்த சிறந்த சேவைக்காக நம்மால் முடிந்த நிதியுதவியை செய்வோம். |
| View More.. |
|
| அறக்கட்டளை பணிகள் |
 |
| ஸ்ரீ பைரவா அறக்கட்டளை ஸ்ரீவிஜய்சுவாமிஜி அவர்களால் ஈரோடு மாவட்டம் அவள்பூந்துறையில் 2004 ம் ஆண்டு ஏப்ரல் மாதம்19ம் தேதி நிர்மாணிக்கப்பட்டது.இந்த அறக்கட்டளை துவங்கப்பட்டதின் நோக்கம் பாரம்பரியமிக்க பைரவர் கோயில் நிர்மாணித்தல் மற்றும் அநாதை,ஆதரவற்ற ஏழைக் குழந்தைகளுக்கு காப்பகம்,கல்வி, ஆசிரமம்,ஆகியவசதிகளை அளித்தல், எந்தவித ஜாதி, மதம், இனம் வேறுபாடு இல்லாமல் உதவிக்கரம் புரிதல், மனிதாபிமான உதவிகள் செய்தல் ஆகிய உயர்ந்த நோக்கங்களுக்காக உருவாக்கப்பட்டது |
| View More.. |
|