கேட்டை நட்சத்திர தோஷ வழிபாடு தெய்வம் விஷ்ணு. கேட்டை நட்சத்திரத்தின் முழு நாழிகை 62 என்கிறார் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையை சேர்ந்த விஜய்சுவாமிஜி. அவர் மேலும் கூறியதாவது:- விஷ்ணு வழிபாடு : இந்துக் கடவுளர்களில் மும்மூர்த்தி கள் என்றுஅழைக்கப்படுபவர்க ளுள் விஷ்ணுவும் ஒருவர். சிவனும், பிரம்மாவும் ஏனைய இரு கடவுள்கள். பிரம்மா படைத்தலுக்கும்,விஷ்ணு காத்தலுக்கும், சிவன் அழித்தலுக்கும் உரியவர்களாகச்சொல்லப்படுகின்ற து. விஷ்ணு சங்க காலத்திலிருந்தே தமிழில் திருமால் என்றும்அழை க்கப்படுகிறார்.இந்து சமயத்தின் ஒரு பிரிவான வைணவசமயத்தி னர் விஷ்ணுவையே முழுமுதற் கடவுளாக வழிபட்டுவருகின்றனர். விஷ்ணுவின் அவதாரங்கள் : உலகில் அதர்மம் தலை யெடுக்கும்போது விஷ்ணு உலகில்அவத ரித்து உலகைக் காப்பதாக வைணவர்கள் கருதுகின்றனர்.இவ்வாறு இவருடைய பத்து அவதாரங்களாக (தசாவதாரம்) கூறப்படுபவை பின்வருவன, மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மர்,வாமனர், பரசு ராமர், ராமர், பலராமர், கிருஷ்ணர், கல்கி, வடஇந்தியர் சிலர் பல ராமருக்கு பதிலாக புத்தரை பத்துஅவதாரங்களுள் ஒருவரா க கருதுகின்றனர்.பாகவதபுராணத்தில் இருபத்தைந்து அவதாரங்கள் கூறப்படுகிறது. புதன் வழிபாடு : கேட்டை நட்சத்திரத்திற்குரிய தெய்வம் புதன். புதன் விரதத்தினைமேற்கொள்ளுபவர்களுக்கு கல்வி, ஞானம், தனம் போன்றவைபெருகுமென்பதால் ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமியர்அனைவ ரும் அனுஷ்டி க்கலாம். புதன் கிழமையன்று நாராயணனை வழிபட்டு பின்னர் நவக்கிரகங்க ளை வணங்கி புத பகவான்முன் மதனநூல் முதல் நான்கு மறைபுகல் கல்வி ஞானம் விதமுடன் அவரவர்க்கு விஞ்சைகள் அருள்வோன் திங்கள் சுதன்பசு பாக்கியம் சுகம்வபல கொடுக்க வல்லான் புதன் கவிபுலவன் சீர்மமால் பொன்னடி போற்றி போற்றி! என்று தோத்திரம் பாடி வணங்குவதால் சகல சிறப்புகளும்பொருந்தி வரும். நவக்கிரகங்களில் நான்காவதான இடத்தில்இருக்கும் இது வரை பச்சை நிற ஆடையை உடுத்தி வண ங்கவேண்டும். தீய குணங்களினால் உண் டான பீடைகளை நீக்கும் சக்தி புதன்தேவனுக்கு உண்டு. ஆகையால் கூட இவ னை கிரக பீட காரகன்என்றும் கிரகபதி என்றும் கூறுவர். மது ரை திருக்கடைïர்திருவெண்காடு ஆகிய ஸ்தலங்களுக்குச் சென்று வழிபாடுசெய்தால் புதன் அருள் கிடைக்கும். சந்திரன் ஆதிக்கம் கொண்ட ராசியில் உள்ள புதன் நட்சத்திரமானஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மீனாட்சி யம்மனை வழிபட்டால் மிகசிறப்பான பலன்களை அடைய முடியும். ஆடை வகைகளில் பச்சை நிற ஆடை அணிவ தாலும்ரத்தினங்களி ல் மரகத கல் அணிவதாலும் பித்தளைபொருட்களை உபயோகப்படு த்து வதாலும் உணவு வகைக ளில்உவர்ப்பு சுவைகளை விரு ம்பி உண்ணுவதாலும் மாது ளைபேரிச்சை, திராட்சை, மு ந்திரி, கேப்பை கூழ் செய்து சாப்பிடுவதாலும் பாசிப்பயறு வகை களை உண்பதாலும் புதனின்ஆதிக்கம் பெறலாம். வாயு கிரகத்தை வழிபாடு செய் வதாலும் நாயுருவி சமித்துகளால் பூஜை செய்வதாலும் மூங்கில் மரத்துக்கு நீர் ஊற்றுவதாலும்பச் சை கற்பூரம் தூபம் போடுவதாலும் புதனின் அருள்பெறலாம்.புதன் ஆதிக் கம் பெற்றவர்கள் வாஸ்து சாஸ்திர முறைப்படிவடக்கு வட கிழக்கு திசைகளில் வசிக்கலாம். வீடுகள் கட்டலாம். மேலும் தொழில் அதிக பணம் ஈட்ட நினைப்பவர்கள் விந்தியமலை முதல் கங்கா நதி தீரம் வரை உள்ள பிரதேசங்களில்வசிக்கலாம். புதன் தோஷம் நீங்க வங்யங்நசிமசி என்று மந்திரம்ஜெபித்தால் புதன் தோஷம் நீங்கும். காக்கும் கடவுளின் திருவருளை நமக்கெல்லாம் வழங்கும் ஆற் றல் படைத்த புதனைஇதயத்தில் இரு த்தி வழி படுவோம். வரதராஜப்பெருமாள் கோவில் : ராமானுஜர் அவரது குரு பெரிய நம்பி கள், சீடர் கூரத்தாழ்வார்ஆகியோர் ஸ்ரீரங்கத்தில் தங்கியிருந்தனர். ராமானுஜர் புகழ்பெறுவதைப் பிடிக்காத சோழ மன்னர் ஒருவர், அவ ரைசிறைப்பிடித்து வரும்படி படைகளை அனுப்பினார். படையினருக்கு ராமானுஜரை அடையாள ம் தெரியாது.
வரதராஜப்பெருமாள் கோவில் எனவே, சீடர் கூரத்தாழ் வார். ராமானுஜர் போல வெண்ணி றஆடை அணிந்து, சோழ படையின ரிடம் நானே ராமானுஜர் என்றுசொல்லி அவர்களு டன் சென்றார். அவருடன் பெரிய நம்பிகளும்அவரது மகள் திருத்துழாயும் சென்ற னர். பெரியநம்பியிடமும்,கூர த்தாழ்வாரிடமும், தன து மதமே உயர்ந்தது என எழுதித்தரும்படி மன்னன் சொன்னா ன். அவர்கள் மறுக்கவே, இருவரின் கண்களையும் பறிக்கும் படி கூறினான். கூரத்தாழ்வார், தன் கண்களை தானே குத்தி பார்வை இழந்தார். சோழ வீரர்கள் பெரியநம்பிகளின் கண்களைக்குருடாக்கினர். பார்வையிழந்த இருவரையும் திருத்துழாய்அங்கிருந்து அழைத்து வந்து, இத்தலத்தில் தங்கினாள்.
இவ்வேளையில் பெரிய நம்பிகளுக்கு வயது 105 தள்ளாத வயதில்கண்களை இழந்து துன்பப்பட்டார். அப் போது அருக்கு காட்சி தந்தவரதராஜப்பெருமாள், அவர் தங்கியிருந்த இந்த தலத்தி லேயேமோட்சம் கொடுத்தா ர். இவர் வரதராஜ பெருமாள் எனப்படுகிறார்.இவருடன் பெருந்தேவி தாயாரும் அருள் செய்கி றாள். பெரிய நம்பிகள் மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில்அவதரித் தார். அன்று இவரது திருநட்சத்திர விழா நடக்கும்.மாதந்தோறும் வரும் கேட்டை நட்சத்திரத்திலும் இவருக்கு பூஜைஉண்டு. கேட்டை நட்சத்திரத்தினர் தங்களுக்கு ஜாதக தோஷம்நீங்க இவரிடம் வேண்டிக் கொள்கிறார்கள். இந்த வழிபாட்டைச் செய்பவர்கள் இவருக்கு வெண்ணிறவஸ்திரம், மல்லிகைப்பூ மாலை அணிவித்து, அதிரசம் வடைநைவேத்தியம் செய் கின்றனர். மருதாணி இலை, கரிசலாங்கண்ணி, செம்பருத்தி ஆகிய மூன்றும் சேர்ந்தஎண்ணையில் தீப மேற்றி வழிபடுவது நல்ல பலன் தரும் என்பதுநம்பிக்கை. இந்த எண்ணை கோயிலிலேயே கிடைக்கிறது. கேட்டைநட்சத்திரத் துடன் கூடிய செவ்வாய்க் கிழமைகளில் வழிபட்டால்பலன் இரட்டிப் பாக இருக்கும் என்கின்றனர். கண் நோயால்பாதிக்கப்பட்டவர்கள் கூரத்தாழவாரிடம் வேண்டிக்கொள்கின்றனர். இருப்பிடம் : தஞ்சாவூரில் இருந்த கும்பகோணம் செல்லும் வழியில் 13 கி.மீ.தூரத்திலுள்ள பசுபதிகோவில் பஸ் பஸ் ஸ்டாப்பில் இருந்துஅரை கி.மீ. தூரத்தில் கோவில் உள்ளது |